Friday 26 September 2014

மிகையான புனைவுகளால் பயன் என்ன?


ஆதியில் நிர்வாணமாகத் திரிந்த மனித இனம் படிப்படியாகவே இன்றைய நாகரீக வளர்ச்சியை அடைந்தது. இயற்கையில் எந்தவொரு சமூகமும் வேறைதையும்விட விசேஷமல்ல. எல்லா ஜீவராசிகளுக்கும் இயற்கை பொதுவானது. ஆனால் இன்றைக்கு மனிதன் மட்டுமே தன் பிறப்பின் பெருமையை கற்பனைகளால் நிரப்பிக்கொள்கிறான். நாம் தற்போது எந்த அடையாளத்தால் அழைக்கப்படுகிறோமோ அதுவே போதுமானது. மிகையான எந்தவொரு புனைவுகளும் நம் ஆற்றலை வீண் வழிகளிலே திசைதிருப்பும். நாம் யார் என்ற வரலாற்றை தெளிவாக தெரிந்த இனத்தினால்தான் அங்கேயே தேங்கி நில்லாமல் வரலாற்றின் அடுத்த கட்டத்திற்கு நகரமுடியும்.


(படம் : திருவாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த தமிழர்கள்)

No comments:

Post a Comment