Friday 26 September 2014

நம் தலைமுறையிலேயே மாறிவிடுமா?

இடையர்களின் தமிழ் பூர்வீக வரலாறு வடக்கிருந்து வந்தேறியாக நம் தலைமுறையிலேயே மாறிவிடுமா?

வரலாறு அறியாத இடையர்கள் இந்த யாதவ கூற்றை நம்பலாம். அதற்கு காரணம் கடவுளே பிறந்துவிட்டார் என்ற பக்தி மயக்கமும் புராண நம்பிக்கையும்தான். யாதவ் என போடும் வடக்கிலிருக்கும் ஒருவனை கோனார் இடையர் என போடச்சொன்னால் முதுகெலும்பை உடைத்துவிடுவான். வரலாறு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் பிற மொழிக்காரனுக்கு இயற்கையாகவே அடிமையாகும் புத்தி ஹிந்திக்காரர்களிடம் இல்லை. அந்த வம்சம் இந்த வம்சம் என நீங்கள் சொல்லும் எல்லாக்கதைகளும் வைணவத்திற்கு அரசர்கள் மாறிய பிறகுதான் நுழைக்கப்பட்டது. இப்படி நுழைத்தவர்களுக்கும் அடையாளப்படுத்தியவர்களுக்கும் லாபமிருந்தது. மிகப்பெரும் மயக்கத்தில் ஆழ்ந்ததில் நமக்கு நட்டமாகியிருக்கிறது. இடையில் உருவான சக தமிழ்ச்சாதிகளெல்லாம் நம்மைப் பார்த்து வடக்கிருந்து வந்த வந்தேறிகள் என கை நீட்டப்போகும் காலம் வெகுதூரமில்லை. நம் வரலாறு அவனுக்கு தெரியாதது மன்னிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அவர்களிடம் எடுத்துச் சொல்லவாவது நமக்கு வரலாறு தெரியவேண்டாமா? நீங்கள் யாதவர் என்றே எண்ணிக்கொள்ளுங்கள். தமிழ் அடையாளங்களை மாற்றாதீர்கள்.

No comments:

Post a Comment