Wednesday 24 September 2014

தெளிவான முற்போக்கான சிந்தனை மட்டும் போதும்...

வணக்கம் சகோதரர்களே....!

நாம் சமூகம் தற்போது ஒரு பெரும் நெருக்கடியான சூழலில் வாழ்ந்துகொண்டிருப்பதை உங்களில் பலர் அறியாமல் இருக்கலாம். நகரம் சார்ந்து வாழ்க்கையை மேற்கொண்டவர்களுக்கு பிற சாதிய அச்சுறுத்தல்களும் அடக்குமுறைகளும் கிடையாது. ஆனால் ஆண்டாண்டு காலமாக தலைமுறை தலைமுறையாக கிராமங்களில் தம் சொந்த மண்ணில் தம் சொந்த உழைப்பில் வாழ்ந்துவரும் பெரும்பாலான நம் சமூக மக்கள் ஏதோவொரு வகையில் பிற சாதிக்குழுக்களுக்கு பயந்துதான் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நம்மில் பல இளைஞர்கள் சகல அறிவோடும் இருந்தும் அது நம் சொந்த மக்களுக்கு எந்தவகையிலேனும் பயன்படுகிறதா?

கிராமங்களில் போதிய வலுவான பாதுகாப்பின்றி பிறருக்கு அஞ்சி வாழும் பய உணர்வுகொண்ட பெரும்பாலான மக்களை நாம் நம் பெருமைக்காய் மறைத்துக்கொண்டு இன்னும் எத்தனை நாளைக்கு எதற்கும் உதவாத பெருமைகளையே பேசிக்கொண்டிருக்கப்போகிறோம்?

நாம் யாரும் யாரையும் சந்தித்துக்கொள்ளாமல் நிதி வசூல் செய்துகொள்ளாமல் பெருமைகளை பேசிக்கொள்ளாமல் நம் ஆற்றலை நம் சமூக மக்களுக்கும் நம்மை வலுவற்றவர்களாய் நினைத்துக்கொண்டிருக்கும் ஏனைய சாதி மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியப்படுத்த முடியாதா? முடியும். அதற்கான ஒரு முயற்சியே இந்த முகநூல் குழு.

தமிழகமெங்கும் நல்ல எழுத்துத்திறமை பேச்சுத்திறமை வழிகாட்டும் திறமை மற்றும் தெளிவான முற்போக்கு அரசியல் தெளிவுகொண்ட நம் சமூகத்தின் 1000 இளைஞர்களை கண்டெடுத்து தேர்வு செய்து நாம் ஒரு தெளிவான அறிவார்ந்த செயல்திறங்கொண்ட தீவிரமான இளைஞர் சமூகம் என்பதை வெளியுலகுக்கு தெரியப்படுத்துவதே இதன் நோக்கம். ஒரு கோடிப்பேரில் ஒரு 1000 இளைஞர்கள் இல்லாமலா இருக்கிறோம்?

இது எந்தவொரு அரசியல் அமைப்பையும் சார்ந்ததல்ல. விருப்பமுள்ளவர்கள் இணையலாம். இந்தச் செய்தியை பகிரலாம்.... ஒரு இணைய வழிப் புரட்சியை நாம் ஆரம்பிக்கப்போகிறோம். எப்படி?.... 5000 நண்பர்கள் இணைந்த பிறகு இதன் செயற்திட்டம் உங்களிடம் விளக்கப்படும்.

நன்கொடை தேவையில்லை. மாற்றத்தை நோக்கிய உங்கள் தெளிவான முற்போக்கான சிந்தனை மட்டும் போதும்...

No comments:

Post a Comment