திருவிழாக்கள் நடத்த தேவையானது ஆடம்பரமும் படோடாபமுமல்ல. உண்மையான பக்தியும் எளிமையும்தான். பெரும் ஆடம்பர செலவு செய்துதான் ஒரு பாரம்பரியத்தை காப்பாற்ற முடியுமென்றால் பொருளாதாரமற்றவர்கள் என்ன செய்வார்கள்?
தெய்வ உணர்வுதான் நம் உண்மையான நோக்கமென்றால், ஏழை பணக்காரன் அடையாளம் தெரியாதபடி திருவிழாக்கள் எளிமையாக நடத்தப்பட வேண்டும். ஆனால் பக்தி உணர்வற்று கௌரவத்திற்காக நடத்தப்படுவதாலே அதிக பணம் செலவழிக்கப்படுகிறது என்பதுதானே நடைமுறை உண்மை..!
No comments:
Post a Comment