Wednesday 24 September 2014

எப்போது மாறும்?

நண்பர்களே...

உங்கள் பிரச்னைகளை நீங்களே எதிர்கொள்ள தயாராகாதவரையில் யாரும் யார் பிரச்னையையும் தீர்க்க முடியாது. அப்படி உங்களிடம் சொல்கிறவர்கள் உங்களை ஒருவித மயக்கத்திற்கு உள்ளாக்குகிறார்கள்.

நாம் ஏன் யாரோ ஒரு தலைவனை எதிர்பார்த்து மயங்கிக்கிடக்க வேண்டும்? நம்மிடம் என்ன இல்லை? நாம் ஏன் நம் சாதிக்கு இன்னமும் ஒரு கதாநாயகனை தேடிக்கொண்டிருக்கிறோம்? பாட்டன் காலத்து அறிவிலிருந்து நாம் சற்றேனும் முன்னேறி இருக்கிறோமா? யாரோ சிலர் எப்போதோ சொன்னதையெல்லாம் சற்றும் ஆராய்ந்து பாராமல் எதற்காக எப்போதும் நாம் தூக்கிச் சுமக்கவேண்டும்? பிரச்னைகளை மறந்து பெருமைகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பதால் எது மாறப்போகிறது? எப்போது மாறும்?

No comments:

Post a Comment