Friday 26 September 2014

எது ஆரோக்கியமானப் போக்கு?

பிற தமிழ்ச் சாதிக்குழுக்களைவிடவும் சங்க இலக்கியத்தில் இடையர்கள் பற்றிய செய்திகள் பல இடங்களிலும் பரவிக்கிடக்கிறது. ஆயர் என்ற நமக்குச் சொந்தமான வார்த்தையை இன்றைக்கு கிறித்தவ பாதிரிகள்தான் பயன்படுத்துகிறார்கள். நம் இளைஞர்களிடையே சுத்தமாக அதன் வழக்கும் வரலாறும் தெரியாமல் போய்விட்டது. ஆயர் என்ற வார்த்தை நம் உணர்வில் உயிரற்றுப் போய்விட்டது. ஐந்திணைகளில் நமக்கென தனியாக ஒரு திணையே படைக்கப்பட்டுக்கிறது. ஆனால் தமிழ் இடையர்கள் சமூகத்தின் மீது ஒரு பெரும் வரலாற்றுத் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் நாங்கள் இடையர்களில்லை என நம் இளைஞர்களே சொல்லிவிடுவார்கள் போலிருக்கிறது. இது உண்மையா எனக்கூட அறிய முயலாமல் இருப்பதும், அதைப்பற்றி எழுதுபவர்களை விரோதமாகப் பார்ப்பதும் ஒரு சமூகத்திற்கு ஆரோக்கியமானதா? இப்படி அக்கறைப் படும் நம் இளைஞர்களை அரவணைப்பது ஆரோக்கியமானதா?

No comments:

Post a Comment