Wednesday 24 September 2014

இடையர் இன சகோதரர்களே சிந்திப்பீர்...!

இடையர் இன சகோதரர்களே சிந்திப்பீர்...!

"சக்திமான்"கள் வந்து எந்த குழந்தையையாவது காப்பாற்ற முடியுமா? முடியவே முடியாது. சுவாரசியத்திற்காக கதைகளில் மட்டுமே சக்தி படைத்ததாய் படைக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தின் உண்மையை அறிந்துகொள்ள சிறிதும் முயலாமல் அந்த சக்திமானுக்கு அபாரமான சக்தியிருப்பதாக வாழ்நாள் முழுதும் ஏதேனும் ஒரு குழந்தை நம்பிக்கொண்டிருந்தால் அக்குழந்தையை நாம் எப்படி பார்ப்போம்? குழந்தைப் பருவம் கடந்தும் அப்படி நம்பிக்கொண்டிருந்தால் அதனால் அந்தக் குழந்தைக்கு ஏதேனும் பயனுண்டா? இது அறிவுக்கு தகுதியா?

பிற சாதிக்காரர்களின் அடக்குமுறைகள், காவல்துறை மிரட்டல்கள், சிறை, வழக்கு, காவல்நிலைய முறைப்பாடு, சட்டமுறைகள் என சம காலத்து வாழ்க்கைக்குத் தேவையான எந்த அறிவையும் வளர்த்துக் கொள்ளாமல், சாதாரண பிரச்னைகளுக்குக்கூட ஒன்றுகூடி நம்மை நாமே வழிநடத்திக்கொள்ளவோ நம்மீதான அடக்குமுறைகளை நேரடியாய் எதிர்கொள்ளவோ போதிய பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளாமல் கடவுளின் புகழை மேன்மேலும் பரப்பி கோயில்கட்டி வருடந்தோறும் திருவிழாக்களுக்காகவே நம் பெருமாபாலான இளைஞர்கள் தங்கள் வாழ்வை செலவிடுகிறார்கள். இதன் விளைவே எதற்கெடுத்தாலும் தலைவிதி என பிரச்னைகளிலிருந்து ஒதுங்கிக்கொள்வது. யாரையும் எதையும் நம்பிக்கொண்டிராமல் நம் பிரச்னைகளுக்கு நாம்தான் போராட வேண்டும் என்ற அடிப்படை அறிவுநிலை நமக்குள் எழுந்தாலொழிய யாரும் நம்மை பொருட்படுத்தப்போவதில்லை. இனி கடவுள்களுக்காக காலத்தையும் பொருளையும் அதிகம் செலவிடாமல் அரசியல், அதிகாரம், அறிவியல் மற்றும் பொருளாதார சிந்தனை பற்றிய பாதைகளில் அடுத்த தலைமுறையை திருப்பிவிட முயற்சியெடுப்போம். பொய்யான பெருமைகளை பரப்பி பரப்பி இளைஞர்களின் ஆற்றலை கற்பனைகளில் நீர்த்துபோகச் செய்யாமல் எதார்த்த வாழ்க்கையை ஒன்றுபட்டு எதிர்கொள்ளூவோம். இதற்கு தலைவர்கள் தேவையில்லை. நாமே நம் கிராமங்களில் எல்லோருக்கும் தலைவனாக மாற ஆரம்பிப்போம்.

"அறிவின் தேடலே மாற்றத்திற்கான முதற்புள்ளி "

No comments:

Post a Comment