அர்த்தமற்ற கருத்துக்களை உணர்ச்சியாகப் பேசிவதாலேயே அது சிந்தனையாகிவிடாது. உணர்ச்சியில் அறியாமைகளும் இருக்கும். உணர்ச்சி அடங்கிவிடும். சிந்தனை அடங்காது. கூட்டம் கூடினாலே மனிதன் உணர்ச்சிவயப்படும் விலங்காகிவிடுகிறான். இதனாலேயே எளிதில் பலரும் தலைவர்களாகிவிடுகிறார்கள். சிந்தனை என்பது தேடல். இதை ஏற்படுத்த மக்களின் மீதான பொய்யற்ற ஆழ்ந்த அக்கறை தேவை. இப்படியான தலைவனாலேயே மாற்றம் ஏற்படும். அரசியல் ஆதாயவாதிகளைத்தவிர இப்படியான தலைவர்களை நாம் இன்னும் சந்திக்கவில்லை.
No comments:
Post a Comment