Friday 26 September 2014

வேற்று மொழி அடையாளம் எதற்கு?

தமிழில் தண்ணீர் தெலுகில் நீலு மலையாளத்தில் வெல்லம் ஹிந்தியில் பானி அறிவியலில் H2O என்பது சரிதான். ஒவ்வொரு மொழியிலும் தண்ணீருக்கு ஒவ்வொரு பெயரென்பதும் உண்மைதான். இருக்கட்டும். தமிழர்கள் தண்ணீரை எதற்காக நீலு என்றும் பானி என்றும் மாற்றிச் சொல்ல வேண்டும். தெலுகர்கள் நீலுவை எதற்காக தண்ணீர் என்றும் பானி என்றும் வெல்லம் என்றும் மாற்றி அழைக்க வேண்டும். ஆனால் ஹிந்திக்காரர்கள் மட்டும் பானி என்றே வழங்கிக்கொள்ள வேண்டும். எல்லா விஷயத்திற்கும் எல்லோரும் எதற்கு ஹிந்திக்காரர்களிடம் அடிமையாக காட்டிக்கொள்ள வேண்டும்? சுய சிந்தனை வளரக்கூடாதா?

No comments:

Post a Comment