Friday 26 September 2014

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..!

யது என்பவர் யார்? 
எதற்காக அவர் பெயரில் ஒரு சாதி தோன்றியது? 
யது என்பவரைப் பற்றிய தமிழ் இலக்கியக் குறிப்புகள் யாவை?
தமிழர்களுக்கும் அவருக்குமான உறவு என்ன? 
வடமொழி தவிர்த்து பிற மொழிகளில் யதுவைப் பற்றி இருக்கிறதா? எந்த மொழியில்? 
அவரது பெருமையான வரலாறு என்ன? 
அவரால் தமிழர்களாகிய நமக்கு கிடைத்த பெருமைகள் என்ன?
இடையர் என்பது தனி நபரைக் குறிப்பதா? மதங்களைக்க 
குறிக்கிறதா? கடவுள் பெயரால் உருவானதா? 
யது என்பவரைப் பற்றி நம் முன்னோர்களுக்கு எப்போது தெரிந்தது? 
யாதவர்கள் என நீங்கள் ஏற்றுக்கொள்வது உங்கள் விருப்பம் எனில் அப்படி ஏற்றுக்கொள்ளாத நம் சகோதரர்களை பகையாகப் பார்ப்பது ஏன்? 
தமிழ் வரலாறுகளை அடையாளங்களை பாதுகாக்கப் போவது யார்?
அவர்கள் ஏற்கும்படியாக விளக்கம் சொல்ல முயற்சி செய்யாமல் விரோதமாகப் பார்ப்பது எதனால்? 
இடையர், கோனார் என்ற பெயர்கள் கேவலமா? அதற்குப் 
பெருமைகள் இல்லையா? அதை ஏன் தவிர்க்க வேண்டும்? இதனால் சாதிக்கு என்ன நட்டம்? 
வரலாறுகள் காலப்போக்கில் மறைவதும் மாறுவதும் மறப்பதும் வலி இல்லையா? 
இப்படி அக்கறைப் படுவதால் நம் சமூகத்திற்கு இழப்பாகிவிடுகிறதா?
தமிழின் பெருமையான மூத்த குடி எதற்காக தன் அடையாளத்தை வேறு புதுப்பெயரில் மாற்றிக்கொள்ள வேண்டும்?

காரணத்தை தெளிவாக சொல்லுங்கள். ஆர்வத்துடன் ஏற்று 
பரப்புவோம்.

No comments:

Post a Comment