Friday 26 September 2014

இடையர் சமூகத்தின் அறிவார்ந்த நண்பர்களே...

இந்த சமூகத்து மக்களின்மேல் உங்களுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் இதுவரைக்கும் இவர்களுக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவைகளை எதிர் கேள்விகளால் ஆராய்ந்து பார்த்து சரி எது தவறு எதுவென அவர்களே சுயமாய் அறியும்படி அவர்களின் சிந்தனையைத் தூண்டுவதே நீங்கள் அவர்களுக்குச் செய்யும் பேருதவி. சுய சிந்தனையால் தானே அறிய முடியாதபடி பாமர ஏழைபாழைகளிடம் வளர்ந்து யாருக்கோ பயனளித்துக் கொண்டிருக்கும் கருத்துக்களையெல்லாம் நம் மக்களின் மூளைகளில் அடைகாத்து வளர்க்க நாமே ஏன் முண்டியடிக்க வேண்டும்? தயவுசெய்து பிற்போக்குத்தனமான கருத்துக்களை மேலும் மேலும் பரப்பி அடுத்த தலைமுறைக்கான அடிமைகளை மதவாதிகளுக்கு தயாரித்துக் கொடுக்க வேண்டாம். கற்பதின்பால் மக்களின் கவனத்தை திசைதிருப்புங்கள்... மாற்றங்களை நம் தலைமுறையிலேயே காணலாம்.

No comments:

Post a Comment