Friday 26 September 2014

இடையன் என்று சொல்லுவோம்..!

வெட்டிப் பெருமைகளை பரப்பிக்கொண்டு இன்னொரு சாதிச்சங்க இளைஞர்களும் முகநூலும் இணையதளங்களும் எப்படியெல்லாம் இருந்தால் நமக்கு வெறுப்பு ஏற்படுமோ அப்படியெல்லாம் நாம் இருக்கவே கூடாது. அடிப்படை ஆதாரமற்ற பொய்யான வரலாறுகளும் கற்பனைக் கதைகளும் அதனால் உண்டாகும் பயனற்ற பெருமைகளும், ஒரு சமூகம் சூழ்ச்சிக்காரர்களிடம் ஏமாறவும் வீழவுமே வழி செய்யும். அறிவுக்கு ஏற்புடையவாறு நம் வரலாற்றைக் கற்றலும் அதை மிகைப்படுத்தாமல் பதிவதுமே நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் பெரும் தொண்டு. தமிழில் இடையில் உருவான சாதிக்குழுக்களே ஏராளம். ஆதியிலிருந்து இன்றைக்கும் அதே பெயரில் வாழும் இடையர்சாதிக் குழு மட்டுமே பழங்குடி. எந்த சாதிக்குழுவுக்கும் இல்லாத நம் தொன்மை அடையாளங்களை மறப்பதும் தவிர்ப்பதும் நியாயந்தானா? 

இடையன் என்று சொல்லுவோம்..!
தோள் உயர்த்தி நில்லுவோம்..!

No comments:

Post a Comment