Wednesday 24 September 2014

இது சரியா? தவறா?

ஹிந்தி மற்றும் கன்னட. தெலுகு யாதவர்களுடன் தமிழ் யாதவர்கள் இணைவதால் பயன் என்ன? ஒவ்வொருவர்களின் வரலாறுகளும் வெவ்வேறன்றோ? இதனால் அடுத்த தலைமுறை தெளிவற்ற வரலாற்றுடன் அல்லவா வளரும்? தாய்மொழி உணர்வு இல்லாத சமூகம் கடைத்தேறுமா? யார் எம்மொழியோ அதே மொழி அடையாளம் காட்டிக்கொள்ள அவர்கள் ஏன் தயங்கவேண்டும்? வீரசிவாஜி, அசோகர் என நாம் பெருமைப்பட்டுக்கொள்வதைப்போல நம் தமிழ் இடையர் சமூக சித்தர்கள் திருமூலர், இடைக்காட்டுச் சித்தர் / சித்தர்கள் பாடல்கள் / முல்லைத்திணை பற்றி அவர்கள் கேள்விப்பட்டாவது இருப்பார்களா? மொழி உணர்வையும் வரலாற்று உணர்வையும் ஊட்டாமல் போராட்ட குணத்தை வளர்க்க இயலுமா? நம் மொழி அல்லாதவர்களை கொண்டாடும் நம்மைப்போல இந்திக்காரர்களின் முகநூலிலோ அடிக்கடி பயன்படுத்தும் இடங்களிலோ அழகுமுத்துக்கோனை சிலாகிப்பதை எடுத்துக்காட்டுங்கள்? இயல்பாகவே ஹிந்திக்காரனுக்கு அடிபணியும் தன்மையை நாம் ஏற்படுத்துவது அறியாமை. அடுத்தவர்களின் பெருமைகளைக் கொண்டாட ஹிந்திக்காரர்கள் நம்மைப்போல் இளிச்சவாயர்களல்ல. பொதுவாகவே தெற்குப் பகுதி ஆட்களை தலைவர்களாக யாரை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்? வடக்கத்தியர்களின் வரலாற்றுப் பெருமைகளை ஏட்டறிவோடு சொல்லி தன் சமூக மக்களை இப்படி வழிநடத்துவதால்தான் இன்றைக்கு சொந்த வரலாற்றை அறியாமல் நிற்கிறான் தமிழன்.

இது பிரிவினை கருத்தல்ல. நம் வரலாற்றின் மீதான அக்கறை. எல்லோருடனும் நட்பு பாராட்டுவோம்.

No comments:

Post a Comment