Wednesday 24 September 2014

கிருஷ்ண ஜெயந்தியும் நம் பொருளாதாரமும்...

தற்போது சராசரியாக கிராமங்களிலேகூட ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு செலவு செய்கிறார்கள். சில கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் 2 அ 3 லட்சங்கள். சென்னை மாதிரியான பெரிய நகரங்களிலோ பகுதிவாரியாக ஆங்காங்கே லட்சக்கணக்கில் திருவிழாக்கள். இப்படிப் பார்த்தால் ஒரு மாவட்டத்திலேயே குறைந்தபட்சம் 50 லட்சம் ரூபாய் ஆகிறது. மாநிலம் முழுதும் சராசரியாக குறைந்தபட்சமாக 10 கோடி என்று கணக்கிடுவோம். நாட்டில் வேறெந்த சமுதாயமாவது இவ்வளவு தொகையை எதற்கேனும் செலவிடுகிறார்களா? தொடர்ச்சியாக 5 ஆண்டு திருவிழாக்களுக்கு செலவிடும் தொகையில் ஆங்காங்கே தொழிற்சாலைகளையோ நமக்கென இலவச கல்வி நிலையங்களையோ உருவாக்கலாம்தானே. மன்னிக்கவும், இது குறை சொல்வதல்ல. அடுத்த ஆண்டு எல்லோரும் எளிமையாய் கொண்டாட முயற்சித்து இயன்றளவு நம் சமூக ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க உதவி செய்வோம்.

No comments:

Post a Comment