Friday 26 September 2014

இடைக்காட்டுச் சித்தனின் பேரன்கள் நாம்

பிறரது வரலாறுகளையெல்லாம் நாம் படிக்கிறோம். நம் வரலாறுகளை யாரேனும் படிக்கிறார்களா? ஏன் படிப்பதில்லை? நம் வரலாற்றின் மீது நமக்கே அக்கறை இல்லாமல் போனால் பிறருக்கு எப்படி அது தெரியவரும்? அடுத்தவன் அடையாளத்தை சுமந்துகொண்டு இத்தலைமுறையோடு நம் அடையாளங்களை தானாய் அழிந்துபோக விடுவதுதான் நம் முன்னோர்களுக்கும் சான்றோர்களுக்கும் நாம் அளிக்கும் மரியாதையா? நம் இளைஞர்களின் கல்வியறிவு இதைக்கூட அலசிப்பார்க்க தகுதியற்றதா? நம் பாட்டன் முப்பாட்டன்களின் அடையாளங்களென்ன அவமானமானதா? பல ஞானச் சித்தர்களையும் புலவர்களையும் சான்றோர்களையும் தந்த இந்த தமிழ் இடைச்சி மக்களின் சிந்தனைகளில் மயக்கமும் வேற்றுமொழி அடையாளமும் நுழைவது நியாயமா? நம் தமிழின் ஆதிச் சமூகத்திற்கு பாதியில் வந்த அடையாளங்கள் எதற்கு? "ஆயர் இடையர் கோனார் "அடையாளங்களை நாமன்றி யார் சுமப்பார்? நமையன்றி யார் வளர்ப்பார்?

No comments:

Post a Comment