Wednesday, 24 September 2014

ஒருமுறை தேடிப் படித்துப் பாருங்கள்...

நாம் சிந்திக்கத் தொடங்கிய நாட்களிலிருந்து இன்றுவரை எதையெதையோ சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு என்னவெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டதோ அதே வட்டத்துக்குள் நின்றுகொண்டு இந்த உலகையும் வாழ்வையும் கவனித்துக்கொண்டிருக்கிறோம். கொஞ்சமாவது நாம் நம்பிக்கொண்டிருப்பவைகளுக்கு எதிரான கருத்துக்களை தேடிப் படித்தால்தானே நாம் சரியானவற்றை கற்றிருக்கிறோமா அல்லது ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோமா என்று தெரியவரும்..! மதங்களின் பெயரால் நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்டவைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அந்த வட்டத்திலேயே இருப்பது சிந்தனையாளர்களுக்கு அழகா? நம் ஆறாவது அறிவுக்குத்தான் மரியாதையா? அந்த வகையில் தயவுசெய்து உங்களுக்கு சந்தேகம் எழுகின்ற எந்தவிதமான கருத்துக்களையும் ஆராயுங்கள். அவ்வகையில் “மஞ்சை வசந்தன்” என்பவர் எழுதிய புத்தகங்கள் உங்களுக்கு பலவகையில் உதவக்கூடும். ஒருமுறை தேடிப் படித்துப் பாருங்கள்... ஏற்புடையவை அல்லவென்றால் ஒதுக்கிவிடுங்கள். குறைந்தபட்சம் நம் மதத்தில் மூட நம்பிக்கை வளப்பவர்களையாவது எதிர்க்கலாம், அடையாளம் காணலாம்....

No comments:

Post a Comment