Wednesday, 24 September 2014

பெருமைகளை மட்டுமே பேசி பரப்பி வாழ்வதில் யாருக்கு பயன்?

நம் அறிவும் ஆற்றலும் பொருளும் திறமையும் வழிகாட்டலும் நமக்கு அடுத்தபடியான வலுவற்ற நம் சமூக மக்களுக்கு சிறிதளவேனும் பயன்படவேண்டும். பெருமைகளை மட்டுமே பேசி பரப்பி வாழ்வதில் யாருக்கு பயன்?

நம் சாதிப் பெருமைகளில் பலவும் கற்பனை கலந்தது. நம் பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்த அறிவோடே அதை இன்னமும் நாம் நம்பிக்கொண்டிருந்தால் வருங்காலத்தில் நம்மில் ஒரு அறிவார்ந்த இளைஞர் சமுகம் உருவாக வாய்ப்பின்றி போய்விடும். இவ்வளவு மேன்மைமிகு பெருமைகளும் நம் சாதிக்கு உண்மையென்றால் நம்மாட்களுக்கு பிரச்னையென்றால் நாமே ஒதுங்கிப்போவது ஏன்? எப்படி? எதனால்?

நாம் நம் மக்களின் & அடுத்த தலைமுறை இளைஞர்களின் எண்ணங்களை அறிவியல் சிந்தனைப் பார்வையோடு கலக்க பாடுபட்டாலொழிய இன்னும் 1000 ஆண்டுகள் கழித்தும் மாடு மேய்ப்பதே பெரும் புண்ணியம் என வாழ்ந்து முடித்துக்கொண்டிருப்பார்கள்.

No comments:

Post a Comment