Thursday 30 October 2014

மீனவன் / இடையன்

மீனவன், மீனவர்கள் என்பது சாதிப்பெயரா? சாதி அடையாளமா? அது ஏதேனுமொரு மதத்தைக் குறிக்கிறதா? இல்லை. அதுவொரு தொழிற்பெயர். தமிழர்களின் அடையாளங்கள் எல்லாம் இப்படித்தான் சாதியாகவோ மதமாகவோ அடையாளப்படுத்தப்படவில்லை.

தமிழர் வகுத்த பிரிவுகள் :

அரசன்
அந்தணன் (சான்றோன்)
வேளாளன்
வணிகன்
மற்றும் நிலத்தை அடிப்படையாக வைத்து ஐந்திணை அடையாளங்கள்.

குறிஞ்சி - வேடன்
முல்லை - இடையன்
மருதம் - வேளாளன், குடியானவன், மள்ளன்
நெய்தல் - மீனவன், கொங்கன், சேர்ப்பன், மருதன், துறைவன்
பாலை - கள்வன் (களவைத் தொழிலாக மேற்கொள்பவன்)

இவற்றில் யார் வேண்டுமானாலும் யார் வீட்டுப் பெண்ணையும் அவர்கள் எதிர்பார்க்கும் தகுதியிருந்தால் மணக்கலாம். தடையில்லை. அந்தணன் என்பது தமிழ்ச்சொல். இதற்கு பிராமணன் என பலரும் தவறாக எண்ணுகின்றனர். அந்தணர் என்போர் எல்லா பிரிவு சான்றோர்களையும் உள்ளடக்கியது.

வர்ணாசிரமம் வகுத்த பிரிவுகள் :

பிராமணன்
க்ஷத்ரியன்
வைசியன்
சூத்திரன்
பஞ்சமன்

இப்பிரிவுகள் எல்லாம் தமிழர்களின் வாழ்வியலுக்கு நேர்மாறானது. மனிதர்களை பிரித்துவைப்பதன் நோக்கோடு வகுக்கப்பட்டது.

மீனவன் என்ற அடையாளத்தைப் போன்றே இடையன் என்ற அடையாளமும் சாதி, மத அடையாளமற்றது. தமிழர்களின் தொன்மையான தொழிற்சார்ந்த பெயர்கள். ஆனால் மீனவன் என்ற அடையாளம் உலவும் அளவிற்கு இடையன் என்ற அடையாளம் உலவவில்லை. உலவவில்லை என்பதைவிட தவிர்க்கப்படுகிறது என்பதே உண்மை.

எவனும் எந்த அடையாளத்தையும்விட மேலானவனும் இல்லை, கீழானவனும் இல்லை என்பதே தமிழர்களின் அடையாளப் பெயர்கள். இப்பெயர்களுக்குப் பின்னால் கட்டுக்கதைகளும் பொய் புரட்டு புராணங்களும் கிடையாது. வாழ்வியல் முறையின் அடிப்படையிலானது. ஆனால் பார்ப்பான் திணித்த அடையாளங்கள் அப்படியல்ல. பொய் புளுகு கட்டுக்கதைகளே அதற்கு பிரதான பெருமை. எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் பெரும்பாலான தமிழ்ச் சகோதரர்களுக்கு புரிவதில்லை.

நண்பர்களே,
க்ஷத்ரியன்... வைசியன்... என்ற பார்ப்பன வர்ணாசிரம அடையாளங்களையும் பெருமைகளையும் தயவுசெய்து தவிப்பீர்களாக.

No comments:

Post a Comment