Tuesday 21 October 2014

மண்குதிரைகளின் மீதான பயணம்?

முதலில் நம் இளைஞர்களின் சிந்தனைகளை மாற்ற வேண்டும். பிறகுதான் மாற்றங்கள் சாத்தியம். அறிவுப் புரட்சியை நடத்தாமல் அரசியல் புரட்சியை நடத்த வாய்ப்பில்லை. அறிவார்ந்த இளைஞர்களாலே ஒரு சமூகம் நிரந்தரமாக முன்னேற்றமடையும். அறிவுக்கு ஒவ்வாத பழமையான கருத்துக்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு முற்போக்கு சக்தியாய் மாறுங்கள். மாற்றுங்கள். காலம் அதிகமானாலும் இதுவே நமக்கு நிரந்தர பாதுகாப்பும் தீர்வுமாக இருக்கும். நம் இளைஞர்களிடம் முற்போக்குக் கருத்துக்கள் எதையும் பிரச்சாரம் செய்யாமல் அவர்களை உலக ஓட்டத்திற்கு ஏற்ப தயார் படுத்தாமல் வெறுமனே முன்னேற்றத்திற்கு பாடுபடுவதாய் அறிவித்துக்கொண்டு செயல்படும் எந்தவொரு அமைப்பும் நம் மக்களின் அறியாமையை தங்களின் சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வதாகவே அர்த்தம். எல்லோரின் உழைப்பும் அக்கறையும் வீணாகக் கூடாது என்பதே எம் விருப்பம்.

விருப்பமுள்ளவர்கள் பகிருங்கள்...

No comments:

Post a Comment