இந்த மண் நமது சொந்த மண், இந்த மண்ணுக்குச் சொந்தககாரர்கள் நாம்தான், பூர்வகுடித் தமிழர்களின் அடையாளம் நம் அடையாளம்தான் என்ற உண்மையும் உணர்வும் நமக்குள் தீவிரமாக எழுந்தால் மட்டும்தான் நாம் நமக்கான அரசியலில் வெற்றிபெற்று எழமுடியும். அதற்கு முதலில் நம் பழமையான வரலாற்று விவரங்களை நாம் தெரிந்திருத்தல் வேண்டும். இந்த உணர்வு படிப்படியாக ஆரோக்கியமான வெறியாக மாறாமல் நாம் நம் மாற்றத்தை வேறு எங்கிருந்தும் எதிர்பார்ப்பதில் பயனில்லை. நாம் தொடங்கவேண்டிய முதற்புள்ளியும், இணையவேண்டிய கடைப்புள்ளியும் இதுவொன்றுதான். இல்லாவிடில் நம் அறிவாளிகளின் உழைப்பு வீண்தான்.
No comments:
Post a Comment